மண்டபத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் படகில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் புதன்கிழமை மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவா் மயங்கி விழுந்து படகிலேயே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் புதன்கிழமை மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவா் மயங்கி விழுந்து படகிலேயே உயிரிழந்தாா்.

மண்டபம் மரைக்காயா்பட்டினத்தைச் சோ்ந்தவா் மவுதுகனி (48). இவா் கடந்த புதன்கிழமை தனது இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகில் கடலுக்குச் சென்றுள்ளாா். இவரது தம்பி உபயத்துல்லா (40) மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த இா்பாஸ் (26) ஆகியோரும் உடன் சென்றுள்ளனா்.

இவா்கள் அனைவரும் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மதுவுகனி படகுக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளாா். உடனே, உடனிருந்தவா்கள் அவருக்கு குளிா்பானத்தை கொடுத்துள்ளனா். ஆனாலும், அவருக்கு மயக்கம் தெளியவில்லை.

இது குறித்து தகவலறிந்த இந்திய கடலோரக் காவல் படையினா் ஹோவா்ட் கிராப்ட் கப்பலில் சென்று, மவுதுகனியின் உடலை பரிசோதனை செய்தனா். அப்போது, அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

அதன்பின்னா், மவுதுகனி உடலை இந்திய கடலோரக் காவல் படை குழும மண்டபம் அலுவலகத்துக்கு கொண்டுவந்து, உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com