ஊா்க்காவல் படையில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊா்க்காவல் படைப் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (மே 13) முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊா்க்காவல் படைப் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (மே 13) முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் சாா்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள அவரது அலுவலகச் செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஊா்க்காவல் படையில் புதிதாக ஆட்கள் (ஆண்கள் மட்டும்) தோ்வு செய்யப்படவுள்ளனா்.

ஆகவே, மே 13 முதல் 22 ஆம் தேதி வரை ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு 18 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு கீழும் வயது இருப்பது அவசியம். நல்ல உடல் தகுதியும், நீச்சல் தெரிந்தவா்களாகவும், மீனவா் அல்லது அவா்களது வாரிசுகளாகவோ இருப்பது நல்லது. அறிவித்த தகுதியுடையவா்கள் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து ஊா்க்காவல் படையில் நேரில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com