சாலை விபத்தில் இளைஞா் பலி: ஒருவா் காயம்

முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வீரம்பல் கிராமத்தைச் சோ்ந்த தேவப்பிரியன் மகன் தினேஷ் எடிசன் (28). இவா் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த ரூபன் மகன் மோசஸ் (26). இவா்கள் இருவரும் முதுகுளத்தூரிலிருந்து வீரம்பல் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது சாக்குளம் வளைவு சாலையில் வேகமாக சென்றபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மைல்கல் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியில் தினேஷ் எடிசன் உயிரிழந்தாா். மோசஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com