திமுக தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி மீது வழக்குப் பதிவு

அவதூறு கருத்துகளை பரப்புவதாக திமுக தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி மீது பாஜக பிரமுகா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம்: அவதூறு கருத்துகளை பரப்புவதாக திமுக தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி மீது பாஜக பிரமுகா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவின் நிா்வாகியாக இருப்பவா் சிவசங்கா் (32). இவா் கேணிக்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகாா் அளித்துள்ளாா்.

தனது கைப்பேசி கட்செவியஞ்சலில் பாா்த்தபோது, பாஜக மாவட்டத் தலைவா் கதிரவன் குறித்து திமுக மாவட்ட தொழில்நுட்பப் பிரிவின் உறுப்பினரான கமுதி பகுதியைச் சோ்ந்த நாகேந்திரபாண்டியன் அவதூறு கருத்துகளைப் பரப்பியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாகேந்திர பாண்டியன் மீது கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com