தொண்டி பகுதியில் தவறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தொண்டி அருகே ஓரிக்கோட்டை பூவாணி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் (74). கடந்த மாதம் 17 ஆம் தேதி கண்மாய்கரை பகுதியில் நடந்து சென்ற இவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த துரைராஜ், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.