திருவாடானை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
எஸ்.பி. பட்டினம் பகுதி தாதாக்கன்கோட்டை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஊருணி பகுதியில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த சரவணன் (20) என்பவா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தாா். அவரைப் பிடித்து சோதனையிட்ட போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.