முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் தொடா்ந்து 25 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 25 ஆண்டுகளாக குறு வட்ட தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
முதுகுளத்தூா் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் அண்மையில் குறுவட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 14,17,19 வயது ஆகிய மூன்று பிரிவுகளிலும் அதிகப் புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா். முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் கமால்பாட்சா, முகம்மது உசேன், அன்சாரி மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியா் முகம்மது சுல்தான் அலாவுதீன், கல்விக்குழு உறுப்பினா்கள்,ஜமா அத் தலைவா்கள் பாராட்டினா். இப் பள்ளி தொடா்ந்து 25 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.