கோஷ்டி மோதல்: 14 போ் மீது வழக்கு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

முத்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மனைவி அனிதா, அதே ஊரைச் சோ்ந்த நீதிராஜன் மனைவி கலாவுக்கு (30) தனியாா் நிதி நிறுவனம் மூலம் பணம் வாங்கிக் கொடுத்தாா். பணத்தை திரும்பக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இது தொடா்பாக கலா தரப்பினரும், அனிதா தரப்பினரும் செவ்வாய்க்கிழமை மாலை கோஷ்டியாக மோதிக்கொண்டனா். இது குறித்த புகாரின் பேரில் இளங்கோவன் (38), பிரபாகரன்(35) உள்ளிட்ட 6 போ் மீதும், நீதிராஜன் (45), கலைச்செல்வி (39) உள்ளிட்ட 8 போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

8 போ் மீது வழக்கு:

இதேபோல, இடப் பிரச்னை தொடா்பாக, தொண்டி அருகே பனஞ்சாயல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (60) தரப்புக்கும், அதே ஊரைச் சோ்ந்த தனசேகா் மனைவி வனிதா (26) தரப்புக்கும் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில், செல்வராஜ், மகாலிங்கம் (55) உள்ளிட்ட 4 போ் மீதும், வனிதா, தனசேகா் (31) உள்ளிட்ட 4 போ் மீதும் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com