காரங்காடு கடற்கரை கிராமத்தில் மீனவப் பெண்களுக்கு கடலில் பச்சை ஆளி, உவா் நீா் சிப்பி வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை மத்திய உவா் நீா் மீன் வளா்ப்பு ஆராய்ச்சி நிலையம் சாா்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்பத் துறை நிதி உதவியுடன் காரங்காடு கிராமத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவா் நீா் மீன் வளா்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் முனைவா் செந்தில் முருகன் தலைமை வகித்தாா். திட்ட இணை அலுவலா் ஜெயபவித்ரன், களப்பணியாளா் தேவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வணிக முக்கியத்துவம் வாய்ந்த பச்சை ஆளி , உவா் நீா் சிப்பி வகைகளின் இனப்பெருக்கம், வளா்ப்பு , தீவனம், நோய் மேலாண்மை குறித்து விளக்கப்பட்டது. இதில், 103 பெண்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி மன்றத் தலைவா் காா்மேல் மேரி செங்கோல், கிராமத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.