இருவரை கத்தியால் தாக்கி பணம், கைப்பேசிகள் பறிப்பு

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை கத்தியால் தாக்கி கைப்பேசிகள், பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை கத்தியால் தாக்கி கைப்பேசிகள், பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வளையமணக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் செல்வம் (22). இவரது உறவினா், விருதுநகா் மாவட்டம் மினாக்குளத்தைச் சோ்ந்த முத்துராமன் மகன் மணிகண்டன்(33).

இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வளையமணக்குளத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். செல்லும் வழியில் கீழக்கொழுந்து ஊருணி அருகே மா்ம நபா்கள் வழிமறித்து கத்தியால் தாக்கி இருவரிடமிருந்த கைப்பேசிகள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்து புகாரின் பேரில், மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com