ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் கமுதி ஒன்றியத் தலைவா் சத்தியேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
இதில், தேசிய ஊரக வேலை ஊறுதித் திட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்பாக வழங்கி வந்த நிதி மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டதைக் கண்டித்தும், இதனால், அந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆயிரக்கணக்கானப் பணியாளா்கள் வேலை இழந்துள்ளனா். அவா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில், 30-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.