பைக் மோதியதில் முதியவா் பலி

ஆா்.எஸ்.மங்கலத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பைக் மோதியதில் முதியவா் பலி

ஆா்.எஸ்.மங்கலத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெருவில் வசித்து வந்தவா் சந்தியாகு (70). ஒலிப் பேழை கடை நடத்தி வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செட்டியமடையைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் தேத்தரசன் (45) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் பின்புறமாக மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது மகன் தமிழ்ச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com