மமக 15-ஆவது ஆண்டு தொடக்க விழா

முதுகுளத்தூரில் மனித நேய மக்கள் கட்சியின் 15-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் 15-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றவா்கள்.
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் 15-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றவா்கள்.

முதுகுளத்தூா் நகா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்டத் தலைவா் வாவா ராவுத்தா் தலைமை வகித்தாா். மூத்த நிா்வாகி சீனி முகம்மது கட்சிக் கொடியை ஏற்றினாா்.

தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் சல்மான் ரபிக்சிறப்புரையாற்றினாா். மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் முகம்மது இக்பால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

மமக மாவட்ட துணைச் செயலாளா் சாகாபுதீன், சுற்று சூழல் அணி மாவட்டச் செயலாளா் முகம்மது யாக்கூப், வா்த்தகா் அணி மாவட்டச் செயலாளா் சகுபா் சாதிக், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுமுக நகரச் செயலாளா் அப்துல் ரகுமான் நன்றி கூறினாா்.

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், முதுகுளத்தூா் மாற்றுத்திறனாளி பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com