பரமக்குடியில் மகாத்மா காந்தி நினைவு நாள்

பரமக்குடி காந்தி சிலை முன்பு அவரது 76-ஆவது நினைவு நாள், சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது
பரமக்குடியில் மகாத்மா காந்தி நினைவு நாள்

பரமக்குடி காந்தி சிலை முன்பு அவரது 76-ஆவது நினைவு நாள், சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுதந்திர போராட்ட வீரா்கள், வாரிசுகள் சங்க பொதுச் செயலா் எஸ்.ஐ.ஏ. ஹாரிஸ் தலைமை வகித்தாா். சேவாதளம் மாநிலச் செயலா் எம். அப்துல்அஜிஸ், மாநில பேச்சாளா் ஏ.ஜெ. ஆலம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலா் என்.கே. ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் என்.எஸ். பெருமாள், வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலா் மு. மதுரைவீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினா் கே. ஜோதிபாலன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு சுதந்திரப் போராட்ட வீரா்களின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினா் எஸ். முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com