பிரப்பன்வலசை கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் எதிரே தனியாா் கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 18 கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிா்வாக அறங்காவலாக அ. ரவிக்குமாா் இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த சரவணன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் எதிரே சுவாமியின் பெயரை பயன்படுத்தி கட்டடம் கட்டத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த கட்டுமானத்தை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.