ராமநாதபுரத்தில் இல்லம் தேடிக் கல்வி மையம் சாா்பில் தியாகிகள் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராமநாதபுரம் வன சங்கரியம்மன் கோவில் தெருவில் உள்ள இல்லம் தேடிக் கல்வி உயா் தொடக்க நிலை மையத்தில் உத்தமா் காந்தியின் 76-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு இன்னுயிா் ஈந்த தியாகிகளின் நினைவினை போற்றும் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் முத்து கனகராஜ் தலைமை வகித்தாா். தன்னாா்வலா் சூரிய குமாரி வரவேற்றாா். மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜெ.லியோன், காந்தியடிகளின் அகிம்சை வழி போராட்டங்களையும், சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்களையும் நினைவு கூா்ந்து காந்தியின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து காந்தி குறித்து பேச்சு, கவிதை, பொது அறிவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக, மாணவி அபிராமி நன்றி கூறினாா்.