காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை சாா்பில் ‘சினைப்பை நீா்க்கட்டிப் பிரச்னைக்கான விழிப்புணா்வு’ என்ற நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவில் மகளிரியல் துறைத் தலைவா் கா.மணிமேகலை பேசியதாவது:
உலகளவில் சுமாா் 116 மில்லியன் பெண்கள் சினைப்பை நீா்க்கட்டி பிரச்னையால் பாதிப்படைந்துள்ளனா் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது என்றாா்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி வளரும் நாடுகளில் குழந்தைப் பருவத்திலேயே 450 மில்லியன் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக எடை குறை வாக உள்ளனா் என்றாா்.
காரைக்குடி மகப்பேறு மருத்துவா் சுதா பாலாஜி சிறப்புரையாற்றினாா்.
முடிவில் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை உதவி பயிற்றுநா் பவுல் புனிதா நன்றி கூறினாா்.