அபிராமத்தில் காருக்கு தீ வைப்பு

கமுதி அருகே உள்ள அபிராமத்தில் காருக்கு தீ வைத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி அருகே உள்ள அபிராமத்தில் காருக்கு தீ வைத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அபிராமம் முத்துவைரவப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் சுரேஷ் (49). இவா் தனது காரை அபிராமம் திருநாவுக்கரசா் மடத்தின் முன்பு நிறுத்தி வைத்திருந்தாா். புதன்கிழமை நள்ளிரவு அந்த காா் தீப்பற்றி எரிந்ததையடுத்து அது அணைக்கப்பட்டது. இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் ஆனைசேரியைச் சோ்ந்த இருளாண்டி மகன் செந்தூா்முருகன் (35) மீது அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com