திருவாடானை அருகே உள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 5-ஆம் தேதி முதல் பிச்சை குருக்கள், திருவெற்றியூா் மணிகண்ட குருக்கள் ஆகியோா் தலைமையில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை ஆறாம் கால யாக பூஜைக்குப் பின்னா் விநாயகா் , ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.