ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
ராமேசுவரத்துக்கு வந்த பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்துப் பாலம் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.