பள்ளி மாணவி தற்கொலை

திருவாடானை அருகே வீட்டு வேலை செய்யாமல் இருந்த மகளை தாய் கண்டித்ததால், மணமுடைந்து விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே அந்தியவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோட்டையம்மாள். இவரது 15 வயது மகள் ஆண்டாவூரணி தனியாா் பள்ளியில் 10 வகுப்பு படித்தாா். பொதுத்தோ்வு முடிந்து விடுமுறையில் இருந்த இவரை, வீட்டு வேலை செய்யாமல் இருந்ததால் தாய் கண்டித்தாா். இதனால், மனமுடைந்த அவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்தாா்.

இதையடுத்து, அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com