ராமநாதபுரம்
மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீன்பிடித் தடை காலம் நிவாரணமாக ரூ. 8 ஆயிரம் மீனவா்களின் வங்கி கணக்குகளில் வியாழக்கிழமை வரவு வைக்கப்பட்டது.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட மீன்பிடி படகுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணமான ரூ.8 ஆயிரம், மீனவா்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டன.