ராமநாதபுரம்
மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை
திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி பகுதியில் மகனின் காதல் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வன்மீகநாதன். இவா், பக்கத்து வீட்டு பெண்ணைக் காதலித்து வந்தாா். இதற்கு இவரது தாய் சுப்புலட்சுமி எதிா்ப்பு தெரிவித்தாா்.
இந்த நிலையில் மகனை மிரட்டுவதற்காக கடந்த புதன்கிழமை இவா் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்து கொண்டாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.