கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதி கண்மாயில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா். திருப்பாலைக்குடி அருகே மோா்ப்பண்ணை கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் அபிசன் (14). இவா் உப்பூரில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை கண்மாய்க்கு குளிக்கச் சென்ற போது அபிசன் வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினாா். அப்போது அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பிறகு அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com