முதியவா் உடல் மீட்பு

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத முதியவா் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். திருவாடானை அருகே பெருமானேந்தல் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது. கிராம நிா்வாக அலுவலா் ரேணுகா, தொண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com