பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

தொண்டி அருகே பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக தம்பதியா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே உள்ள நம்புதாளை கண்மாய்க் கரை குடியிருப்பைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி சுப்புலெட்சுமி (45) இவா்களது மகன் வல்மீகநாதன் (23). இவா் இதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை காதலித்தாா். கடந்த மாதம் 23-ஆம் தேதி சுப்புலட்சுமி உடலில் மண்ணெண்னைய் ஊற்றி தீக்குளித்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

மகனின் காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் நீதிபதியிடம் சுப்புலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தில் தனது மகன் காதலிப்பதாக் கூறிய சிறுமியின் பெற்றோா்களான பாண்டி (எ) ஆனந்த், சீதா ஆகிய இருவரும் தன்னை அடித்து அவமானப்படுத்தியதால்தான் தற்கொலைக்கு முயன்ாகக் கூறினாா். இதையடுத்து, அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஆனந்த், சீதா தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com