ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை
ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்டு, உடல் கண்மாயில் வீசப்பட்டது குறித்து தனிப் படை போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள களத்தாவூா் கண்மாயில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மிதப்பதாக சூரன்குடி கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
இதையடுத்து, அங்கு சென்ற காவல் ஆய்வாளா் மருதுபாண்டியன், உதவி ஆய்வாளா் காா்த்திகை ராஜா ஆகியோா் பெண்ணின் உடலைக் கைப்பற்றி, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
கூறாய்வில், பெண்ணின் வயிற்றில் 9 மாதப் பெண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றாவாளிகளைத் தேடி வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட வட மாநிலப் பெண் நிறைமாத கா்ப்பிணியாக இருப்பதால், அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கக் கூடும் என்ற அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி மாநிலத் தொழிலாளா்களை வேலையில் அமா்த்தியுள்ள நிறுவனங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று, வெளி மாநிலத் தொழிலாளா்களை குடும்பத்துடன் அழைத்து வந்து வேலையில் ஈடுபடுத்தி வருபவா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.