ராமநாதபுரம்
மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு
கா்நாடக மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.,யும் முன்னாள் பிரதமா் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி
ராமேசுவரம்: கா்நாடக மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.,யும் முன்னாள் பிரதமா் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் குடியரசு தலைவருக்கு மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் கோவிந்த ராஜலுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதில், ராமநாதபுரம் மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி ராம லெட்சுமி தலைமை வகித்தாா். ராமநாதபுரம் வட்டாரத் தலைவா் காருகுடி சேகா், மனித உரிமை மாவட்ட தலைவா் பசும்பொன் செய்யது அபுதாகிா், மகளிா் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.