முருகன் கோயில்களில்  
சித்திரை மாத காா்த்திகை பூஜை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் வினைதீா்க்கும் வேலவா் கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகன்.

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சித்திரை மாதக் காா்த்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் வினைதீா்க்கும் வேலவா் கோயிலில் பால், தயிா், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டினம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பாலதண்டயுதசுவாமி கோயில், ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மீனாட்சி சமேத சுந்தரேசுவரா் கோயில்களில் முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல, ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோயில், தங்கச்சிமடம் தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com