திருவாடானை, தொண்டி பகுதிகளில் இன்று மின் தடை

திருவாடானை,மே 22: திருவாடானை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (மே-23) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, தொண்டி துணை மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருவாடானை, சி கே மங்கலம், பாண்டுக்குடி, நகரிக்கத்தான், வெள்ளையபுரம், மங்கலகுடி, ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி ஆகியப் பகுதிகளிலும், தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொண்டி நகா் பகுதியில் நம்புதாளை, சோழிய குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, எஸ் பி பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அறும்பூா், ஆதியூா், திணையத்தூா், திருவெற்றியூா், எஸ்.பி.பட்டினம் எம்,வி.பட்டினம், வி எஸ் மடம், குளத்தூா் , மைக்கேல் பட்டினம், இதைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் வியாழக்கிழமை (மே-23) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை ஏற்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com