திருப்பத்தூர் ஒன்றியம் கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. நிறைவாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு திருப்பத்தூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தி தலைமையும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சார்லஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயலலிதா ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
முன்னதாக தலைமை ஆசிரியை செ.ரோஸி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கராத்தே பயிற்சியாளர் சே.கார்த்திகேயன் மற்றும் கல்வி அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவிகளைப் பாராட்டி பதக்கமும் சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் ஆசிரியப் பயிற்றுநர் வனிதா, ஆசிரியர்கள் ஸ்டீபன், பால்ராஜ், குமார், ராஜேஸ்வரி அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.