சிவகங்கையில் உள்ள சாம்பவிகா பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பிஜெ. அப்துல்கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.அதன்பின்னர், பள்ளியின் செயலர் சேகர் அப்துல்கலாமின் எளிமையான வாழ்க்கை பற்றியும், நாட்டிற்கு ஆற்றிய அர்ப்பணிப்பு குறித்தும் விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்களது முகத்தில் கலாமின் உருவப்படம் வரையப்பட்ட முகஉறையை அணிந்து கொண்டு அணி வகுத்து நின்றனர். இதில்,பள்ளியின் தலைமையாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.