உலக மீட்பர் ஆலயத் திருவிழா

தேவகோட்டை ராம் நகரிலுள்ள உலக மீட்பர் ஆலயத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை தேர்பவனி நடைபெற்றது.

தேவகோட்டை ராம் நகரிலுள்ள உலக மீட்பர் ஆலயத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை தேர்பவனி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ராம்நகர் பங்கு பணியாளர் சேசு தலைமை வகித்தார். பாளையங்கோட்டை மறைமாவட்டம் முதன்மைக் குரு சேவியர் டெரன்ஸ் மறையுரையாற்றினார். இவருடன் இணைந்து 20 குருவானவர்கள் திருவிழா திருப்பலி நிறைவேற்றினர்.  திருப்பலி முடிந்ததும் தேர்பவனியானது, ஆலய சாலை, திருப்பத்தூர் சாலை, சிவகங்கை ராஜா சாலை, முதல் வீதி வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.   இறுதியில், நற்கருணை ஆசிர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராம்நகர் பங்கு மக்கள் மற்றும் கிளை பங்கு கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com