சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை குடிநீர் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், பங்கேற்ற சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென கோஷம் எழுப்பிச் சென்றனர்.
மேலும் நகரில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன், சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன்,உடற்கல்வி ஆசிரியர் ராபின்சிங் உள்ளிட்டோர் பேசினர்.