சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர் பணிக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி:தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. இந்த அலகில் ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலான கணக்காளர் பணியிடம் காலியாக உள்ளது. மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இளங்கலை,முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் வணிகவியல் துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேற்கண்ட பணிக்கு தகுதியான நபர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்களது சுய விபரக் குறிப்புடன்,சான்றிதழ் நகல்களையும் இணைத்து வரும் மே 30 மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 31,பெரியார் நகர் முதல் தெரு,அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில், சிவகங்கை - 630561 என்ற முகவரிக்கு வந்த சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.