சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் வட்டாரத்தில் விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேளாண்மை துறையில், நடப்பு ஆண்டில் நீடித்த நிலையான மானாவாரி விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காரிப்பருவத்தில் உளுந்து 375 ஏக்கர் பரப்பிலும், ராபி பருவத்தில் நிலக்கடலை 175 ஹெக்டேர் பரப்பிலும், எள் 150 ஹெக்டேர் பரப்பிலும், உளுந்து 300 ஹெக்டேர் பரப்பிலும் பயிரிடப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பங்குபெறும் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் விதை நுண்ணூட்டம் மற்றும் நீர் உரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.1,250 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் அறிய எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.