சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரசார வாகனம் வலம்

சிவங்கையில் வரும் நவ.18இல் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரசார வாகனம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவங்கையில் வரும் நவ.18இல் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரசார வாகனம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில்நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதிஉறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பிரசார வாகனத்துடன், கலை நடனக் குழுவினர் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ,கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி,ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட அலுவலர்கள், அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com