சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில்காவல் ஆய்வாளரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் ஆய்வாளர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கஇதில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் இளையான்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி, மானாமதுரை ஒன்றியச் செயலாளர் கே.பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முனியராஜ், பரிசுத்தமங்களசாமி, முருகன், சலையத்ராஜ் உள்ளிட்டோர் ஆய்வாளர் பாலாஜியின் நடவடிக்கையைக் கண்டித்து பேசினர்.