நாகர்கோவிலிலிருந்து கோவைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. அதன்பின் புறப்படும் நேரம் வந்ததும் இந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது மெதுமாக நகர்ந்து கொண்டிருந்த ரயில் பெட்டி முன்பு ஒருவர் பாய்ந்தார்.
இச்சம்பவத்தில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டவருக்கு 35 வயது இருக்கும். இவர் அணிந்திருந்த சட்டைப்பையில் நாகர்கோவில்- கோவைக்கான ரயில் பயணச்சீட்டு இருந்தது. தற்கொலை செய்து கொண்டவர் பற்றிய மேலும் விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.