காரைக்குடி நகர் பகுதிகள், தேவகோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி கழனிவாசல் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான காரைக்குடி நகர் பகுதிகள், தேவகோட்டை சாலை, அரியக்குடி, பேயன்பட்டி, செக்காலைக் கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் என். சித்தி அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.