தேவகோட்டை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கடந்த 2 நாள்களாக 14 ஆவது வார்டு நகராட்சி பள்ளி, பனிப்புலான் வயல் ஊராட்சி பள்ளி, நகரத்தார் துவக்கப்பள்ளி, இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் பள்ளி, மாணிக்கம் நடுநிலைப்பள்ளி மற்றும் ஜமீன்தார் தெரு உயர்நிலைப்பள்ளி என 6 பள்ளிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு சிட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். வட்டாரத்தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாவட்டத்தலைவர் இராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும் முறை குறித்துக் கூறினார்.செயலாளர் கப்பலூர் பாஸ்கரன் நன்றி கூறினார்.