சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை (அக்.16) மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூர் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.