காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2018 -19 ஆம் ஆண்டு பி.ஏ., பொது நிர்வாக மாணவர்களுக்கு அக்.22 முதல் தொடர்பு வகுப்புகள் நடைபெறவுள்ளது.
பி.ஏ., பொது நிர்வாகம் முதலாண்டு மாணவர்களுக்கு அக். 22, 23 ஆம் தேதிகளிலும், இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அக். 23, 24 ஆம் தேதிகளிலும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு அக்.25, 26 ஆம் தேதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் தொடர்பு வகுப்புகள் நடைபெறும். இத்தகவலை பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) சு. ராசாராம் தெரிவித்துள்ளார்.