அரசின் புகைப்படக் கண்காட்சி: அமைச்சர் தொடக்கி வைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிவட்டம், கல்லல் ஊராட்சியில், தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்த

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிவட்டம், கல்லல் ஊராட்சியில், தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் திங்கள்கிழமை தொடக்கிவைத்துப் பார்வையிட்டார். 
மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில், தமிழக முதல்வர் வழங்கிய அரசு நலத்திட்ட உதவிகள், முன்னாள் முதல்வர்கள், உலகத் தலைவர்கள், பேரறிஞர்கள் சந்தித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 
கண்காட்சி தொடக்க விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் க. லதா, தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com