காரைக்குடியில் விஸ்வ பிரம்மா ஜயந்தி விழாவை முன்னிட்டு, பூத்தட்டு ரத ஊர்வலம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
காரைக்குடி வட்டம், ஸ்ரீ விஸ்வ பிரம்மா ஜயந்தி விழாக் குழு சார்பில், காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் காமன் பண்டிகை திடலில் விஸ்வ பிரம்மா காயத்திரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, மாலையில் விஸ்வகர்மா ஐவர்ண கொடி ஏற்றப்பட்டது.
பின்னர், விஸ்வ பிரம்மா பூத்தட்டு ரத ஊர்வலமானது, காரைக்குடி முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு, அம்மனுக்கு பூத்தட்டு செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, விஸ்வகர்ம ஜயந்தி விழா குழுத் தலைவர் வீரப்பன், செயலர் அப்பாவு ராமசாமி, பொருளாளர் முருகானந்தம், துணைத் தலைவர்கள் கருப்பையா, விஸ்வநாதன், ராஜேந்திரன், கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.