பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலி பறிப்பு

காரைக்குடி அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து

காரைக்குடி அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கொத்தரியைச் சேர்ந்தவர் டி.எஸ். துரைராஜ். இவரது மனைவி வசந்தாள் (62). இவர்கள் இருசக்கர வாகனத்தில் குன்றக்குடி கோயிலுக்கு சென்றுவிட்டு, கடந்த புதன்கிழமை மாலை ஊர் திரும்பினர்.
 அப்போது கொத்தரி சோலையாண்டவர் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், வழிமறித்து, வசந்தாள் அணிந்திருந்த ஏழரைப் பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம். அப்போது, வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். 
    இதுகுறித்து பள்ளத்தூர் காவல்நிலையத்தில் வசந்தாள் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com