காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் போராட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கக் கோரி, காரைக்குடியில் அந்நிறுவனத்தின் 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கக் கோரி, காரைக்குடியில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய காரைக்குடி தொலைத் தொடர்பு மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இதையொட்டி, இம்மாவட்டங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் தொலைபேசி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதில், 98 சதவீதம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தை, சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர்கள் பூமிநாதன், யுவராஜ், மாரி, தமிழ்மாறன், கிருஷ்ணசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், வாடிக்களையாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com