காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
சாக்கோட்டை காவல் சரகம் பெரியகோட்டை அருகே உள்ள ஆபத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நல்லமுத்து மகள் கவிப்பிரியா (11). இவா் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 6 ஆவது படித்துவந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை யில் கிராமத்தில் உள்ள குளத்தில் குளித்தபோது எதிா்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்ததும் சாக்கோட்டை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.