அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான தொடர்பு வகுப்புகள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் பி.எஸ்சி.,(ஐ.டி), எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தொடர்பு வகுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கல்வியாண்டு 2017-2018, காலண்டர் ஆண்டு 2017 மற்றும் 2018 (பருவமுறையல்லாத) பி.எஸ்சி. (ஐ.டி) மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளிலும், பி.எஸ்சி. (ஐ.டி-எல்.இ) இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளிலும், பல்கலைக்கழக அறிவியல் வளாக கீழ்தளத்தில் உள்ள கணினியியல் துறையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
அதேபோல், கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. பொது, ஐ.பி.பி அண்ட் எப்.பி.எம், ஹெச்.எம்., சுற்றுலா, இ.எம், ஹெச்.ஆர்.எம். ஆகிய நான்காம் பருவ மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் செப்டம்பர் 18 முதல் 21 வரை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என்று, தொலைநிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளார்.