சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியினை கல்லூரிச் செயலர் ஆறுமுகராஜன் தொடக்கி வைத்தார். பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளான காரைக்குடி, ராமநாதபுரம், சருகணி, கீழக்கரை, தெக்கூர், உள்ளிட்ட 19 கல்லூரி கபடிக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டிக்கு ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும், அழகப்பா உடற்கல்வி கல்லூரியும் தேர்வு பெற்றன. இப்போட்டியில் காரைக்குடி உடற்கல்வி கல்லூரி வெற்றி பெற்று முதலிடத்தையும், திருப்பத்தூர் கல்லூரி 2 ஆம் இடத்தையும் பிடித்தன.
இவ்விரு அணிகளுக்கும் கோப்பை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும், இதில் பங்கு பெற்ற ஒட்டுமொத்த அணிகளின் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் ஜெயவேல், வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.